ஆச்சார்ய கிருபளானி
ஜீவிதராம் பகவன்தாஸ் கிருபளானி | |
---|---|
பிறப்பு | நவம்பர் 11, 1888 ஐதராபாத், மும்பை மாகாணம் |
இறப்பு | மார்ச்சு 19, 1982 (அகவை 93) |
பணி | வழக்கறிஞர் |
அறியப்படுவது | இந்திய விடுதலை இயக்கம் |
சமயம் | இந்து |
வாழ்க்கைத் துணை | சுசேதா கிருபளானி |
ஆச்சார்ய கிருபளானி என்று அறியப்படும் ஜீவிதராம் பகவன்தாஸ் கிருபளானி (11.11.1888 – 19.03.1982) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் அரசியல்வாதி. இந்திய விடுதலையின் போது காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்தவர். பிரதமர் பதவிக்கான நபரைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டுக் காங்கிரசு கட்சிக்குள் நடத்தப்பட்ட தேர்தலில் சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களுக்கு அடுத்தபடியாக இரண்டாம் அதிகபட்ச வாக்குகளை இவர் பெற்றிருந்தார். எனினும் மோகன்தாசு கரம்சந்த் காந்தி ஜவகர்லால் நேருவைப் பிரதமராக்கினார். [1]
1970களின் நெருக்கடி நிலைக்குப் பின்னர் இவரது அரசியல் பங்களிப்பு குறைந்து போனது.
சுசேதா கிருபளானி
சுசேதா கிருபளானி | |
---|---|
சுசேதா கிருபளானி | |
உத்தரப் பிரதேச முதலமைச்சர்கள் | |
பதவியில் 02.10.1963–14.03.1967 | |
முன்னவர் | சந்திர பானு குப்தா |
பின்வந்தவர் | சந்திர பானு குப்தா |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 25 சூன் 1908 அம்பாலா, அரியானா |
இறப்பு | 1 திசம்பர் 1974 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
சுசேதா கிருபளானி (Sucheta Kriplani) (வங்காள: সুচেতা কৃপলানী, இந்தி: सुचेता कृपलानी) இந்தியா உத்தரப்பிரதேச மாநில முதல் பெண் முதலமைச்சராகப் பதவி வகித்த பெருமை உடையவர்.
ஹரியானாவில் இருந்த வங்காளக் குடும்பத்தில் பிறந்தவர் சுசேதா. இவரது தந்தையான எஸ். என். மஜீம்தார் மருத்துவரும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவரும் ஆவார்.
காந்தியடிகளின் வழியைப் பின்பற்றிய சுசேதா வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். இந்தியப் பிரிவினைக் கலவரத்தின் போது காந்தியடிகள் மேற்கொண்ட நவகாளி யாத்திரையில் சுசேதாவும் கலந்து கொண்டார்.
No comments:
Post a Comment