கவிக்கோ அப்தூல்ரஹ்மான்
· பிறப்பு – 02.11.1937 , ஊர் – மதுரை .
· ‘தொன்மம்’ என்ற இலக்கிய உத்தியை மிகுதியாக பயன்படுத்தியவர் .
· வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் பேராசிரியாக பணியாற்றியவர் .
· ‘கவிக்கோ’ எனும் இதழை நடத்தினார் .
பரிசும் பாராட்டும்
· தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்றார் .
· தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருது பெற்றார்
· ‘கவிக்கோ’ என்னும் பட்டம் பெற்றார் ,
· "மரபுக்கவிதையின் வேர் பார்த்தவர் ; புதுக்கவிதையின் மலர் பார்த்தவர் என்று பாராட்டப்பட்டார்"
சிறந்த நூல்கள்
· பால்வீதி , நேயர் விருப்பம் , சுட்டுவிரல் , பித்தன் , சொந்த சிறைகள் , கரைகளே நதியாவதில்லை , விலங்குகள் இல்லாத பகுதி , விதை போல விழுந்தவன் , முத்தமிழின் முகவரி , அவளுக்கு நிலா என்று பெயர் .
· ஆலாபணை – சாகித்திய அகாதமி வென்ற நூல்.
சிறந்த தொடர்கள்
· புறத்திணை சுயம்வரம் மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையுடன் குருட்டு தமயந்தி
· உன் தராசுத்தட்டுகளை கொஞ்சம் கண்திறந்து பார்
இங்கே புறாவின் மாமிசத்தை ஜீவிகள் உண்ண ஆரம்பித்து விட்டார்கள்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மு.மேத்தா
· பிறப்பு – 05.09.1945 , ஊர் – பெரியகுளம் , தேனி மாவட்டம்
· இயற்பெயர் – முகமது மேத்தா .
· ‘வானம்பாடி’ எனும் புதுக்கவிதை ஏட்டின் வாயிலாக அறிமுகமானார் .
· சென்னை மாநிலக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார் .
· ‘தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி’ எனும் கவிதை , இவருக்குபுகழ் தேடித்தந்த கவிதை ஆகும் .
· இவர் எழுதிய ‘ஊர்வலம்’ எனும் கவிதை நூல் , தமிழக அரசின் பரிசைப் பெற்றது .
· ‘சோழநிலா’ எனும் வரலாற்று நாவல் , ஆனந்தவிகடன் இதழ் நடத்திய பொன்விழா இலக்கிய போட்டியில் முதல் பரிசை வென்றது .
· தமிழக அரசு வழங்கும் பாவேந்தர் விருதினை பெற்றுள்ளார் .
மேற்கோள்கள்
· இலக்கணம் செங்கோல் யாப்பு – சிம்மாசனம் எதுகை பல்லக்கு மோனை தேர்கள்
· மரங்களில் நான் ஏழை; எனக்கு வைத்த பெயர் வாழை
சிறந்த நூல்கள்
· கண்ணீர் பூக்கள்ள , ஊர்வலம் , சோழநிலா , மனச்சிறகு , வெளிச்சம் வெளியே இல்லை . ஒருவானம் இரு சிறகு , காத்திருந்த காற்று , திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் , நந்தவன நாற்காலி .
· ஆகாயத்தில் அடுத்தவீடு – சாகித்திய அகாதமி வென்ற நூல்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சிற்பி பாலசுப்ரமணியம்
· பிறப்பு 29.07.1936 , ஊர் – ஆத்துப்பொள்ளாச்சி
· பெற்றோர் – பொன்னுசாமி , கண்டியம்மாள் .
· பொள்ளாச்சி நல்லமுத்து மஹாலிங்கம்ம கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார் .
· கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக பணிபுரிந்தார் .
· இவரது கவிதைகள் ஆங்கிலம் , கன்னடம் , மலையாளம் , மராத்தி , இந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்துள்ளது .
· சாகித்திய அகாதமி, ஞானபீட தொகுப்புகளில் இவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளது .
விருதுகள்
· இவர் எழுதிய ‘மௌன மயக்கங்கள்’ ,’பூஜ்ஜியங்களின் சங்கிலி’ எனும் கவிதை நூல்கள் , தமிழ்நாடு அரசின் பரிசைப் பெற்றுள்ளது .
· லலிதாம்பிகா அந்தர்ஜனம் என்பவர் மலையாளத்தில் எழுதிய நாவலை , அக்னிசாட்சி எனும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் . இந்நூல் , 2000 ஆண்டின் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருதினை பெற்றது .
· இவர் இயற்றிய ‘ஒரு கிராமத்து நதிக்கரையில்’ எனும் நூலுக்கு , 2002-ல் சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
· தமிழ் இலக்கிய உலகில் இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்ற பெருமை , சிற்பிக்கு மட்டுமே உண்டு .
· தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்றுள்ளார்.
· தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் , ஆங்கில இலக்கியநூல் பரிசு பெற்றுள்ளார் .
· ‘கவிஞர்கோ’ எனும் பட்டம் , குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பட்டது.
சிறந்தநூல்கள்
· சிரித்த முத்துகள் , நிலவுப்பூ , ஒளிபறவை , சர்ப்பயாகம் , சூரியநிழல் , ஆதிரை , அலையும் சுவடும் , புன்னகை பூக்கும் பூனைகள் , நீலக்குருதி